×

தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மேரிகோல்டு மலர்

 

ஊட்டி, ஜூலை 6: ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் பூத்துள்ள மஞ்சள் நிற மேரிகோல்டு மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு வரும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இந்த சீசனின் போது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல் பல ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகளும் காட்சி மாடங்களில் வைக்கப்படும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். மே மாதம் மலரும் காட்சி முடிந்தால் படிப்படியாக பூங்காவில் மலர்கள் குறைந்துவிடும். அதன்பின் இரண்டாவது சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலே மாணவர்களை காண முடியும்.  அதுவரை பூங்காவில் கண்ணாடி மாளிகையில் மட்டுமே மாணவர்களை காண முடியும். மற்ற இடங்களில் மலர்கள் இருக்காது. ஆனால், இம்முறை தாவரவியல் பூங்காவில் நுழைவாயில் பகுதிகளில் இருபுறங்களிலும் மீறிக்கொண்டு மலர்கள் தற்போதும் பூத்து காணப்படுகின்றன.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் போட்டு காணப்படும் இந்த மேற்கொண்டு மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்கள் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். அதே சமயம் பூங்காவும் அழகாக காட்சியளிக்கிறது. இன்னும் ஒரு மாதம் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மேரிகோல்டு மலர் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Botanical Garden ,Nilgiri ,
× RELATED பயணிகள் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை