×
Saravana Stores

தாராபுரத்தில் ‘வெள்ளை காக்கா’ – மக்கள் பார்த்து வியப்பு

தாராபுரம்: தாராபுரத்தில் வெள்ளை காக்காவை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் வெள்ளை காகம் ஒன்று அமர்ந்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் இடையே தகவல் பரவியது. இதனை தொடர்ந்து சிறுவர்- சிறுமிகளும், பெண்களும் ஆர்வம் மிகுதியால் அங்கு குவிந்தனர். வெள்ளை காகத்தை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.‘‘வெள்ளை காக்கா பறக்குது சொன்னா நம்புவீங்களா’’ நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தகவலை சொல்பவர்களுக்கு இதை உதாரணமாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஒரு வெள்ளை காகம் அப்பகுதியில் பறந்து திரிந்து தென்னை மரத்தின் மீது வந்து அமர்ந்து கா…கா… என கரைந்து அழைத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது….

The post தாராபுரத்தில் ‘வெள்ளை காக்கா’ – மக்கள் பார்த்து வியப்பு appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tarapuram, Tirupur district ,
× RELATED ஆட்டோ திருடிய கட்டுமான தொழிலாளி கைது