×

தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜுக்கு இளைஞர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜ், வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று 49வது வார்டு முழுவதும் வாக்கு சேகரித்தார். அப்போது இளைஞர்கள் பலர், காமராஜுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பதாகைகளுடன் சைக்கிள்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய காமராஜ், ‘‘என்னை வெற்றி பெற செய்தால் 49வது வார்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவேன். குப்பை கழிவுகளை தினசரி அகற்றவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்,’’ என உறுதியளித்தார். அவரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து நிச்சயமாக எங்கள் அனைவரின் வாக்குகளும் உதயசூரியன் சின்னத்திற்கே என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். வாக்கு சேகரிப்பின்போது பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜுக்கு இளைஞர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Kamaraj ,Tambaram ,vice president ,Tambaram Corporation ,
× RELATED வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்:...