×

தானியங்கி இயந்திரத்தில் இன்று முதல் மஞ்சள் பைகளை வழங்கும் திட்டம்

சென்னை: தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சள் பை பெறும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து, தலைமை செயலகத்தில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ல் தொடங்கப்பட உள்ளது. எனவே, ஜூலை 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். மஞ்சள் பை வைப்பதற்கான வெண்டிங் இயந்திரத்தை தயார் செய்துவிட்டோம். நாளை (இன்று) இத்திட்டத்தை தொடங்க இருக்கிறோம். இயந்திரத்தில் 10 ரூபாயை செலுத்தி நாம் மஞ்சள் பையை எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் பையை விற்பனை செய்ய விரும்பும் நபர்களும் வெண்டிங் இயந்திரம் மூலமாக பைகளை எடுத்து விற்பனை செய்யலாம். இவ்வாறு கூறினார்….

The post தானியங்கி இயந்திரத்தில் இன்று முதல் மஞ்சள் பைகளை வழங்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretariat ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலை பணிகளை காலதாமதமின்றி...