×

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்

சென்னை:: தமிழக பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்:* ரூ.9370.11 கோடி செலவில் கோவிட் நிவாரணத் தொகுப்பு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டதுரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும்*நடப்பு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கீடு*அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும்*ஆனைமலையாறு, நீராறு – நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை*நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு*ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்*பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்*அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும் – உலக வங்கி உதவி பெறப்படும்*பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு*பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் காவிரி டெல்டாவில் செயல்படுத்தப்படும்*நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3ம், 4ம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்*ரூ.6000 கோடி மதிப்பில் இந்திய அளவில் கடல் மீன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது*மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு*மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்*ரூ.6.25 கோடி செலவில் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான ஆய்வு*காசிமேடு மீன்பிடித்துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்*மீன்பிடிதுறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.433.97கோடி*5 ஆண்டுகளில் சர்வதேச நீலக் கோடு சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்*மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த ரூ.143 கோடி ஒதுக்கீடு*ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்று அமைக்கப்படும்*இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்*ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த இயக்கம் ஒன்று உருவாக்கப்படும்*ரூ.100 கோடி செலவில் ஈர நிலங்கள் இயக்கத்தை செயல்படுத்த நடவடிக்கை*குறைந்தபட்சம் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் அறியும் வசதி ஏற்படுத்தப்படும்*திட்டமதிப்பீடு, ஒப்பந்தபுள்ளி உள்ளிட்ட பணிகள் ஓராண்டுக்குள் முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும்*79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை*கிராமங்களில் அமைந்துள்ள 1.27கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை*83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச்சுக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை*2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டப்படும்*கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வீடுகள் கட்டித்தரப்படும்*கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3548 கோடி ஒதுக்கீடு*ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ400 கோடி ஒதுக்கீடு*சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ3 கோடி மீண்டும் அளிக்கப்படும்*கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்*கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ரூ100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்*ரூ1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்*ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்*100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் ஊதியத்தை ரூ300 வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தும்*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கொரோனா சிறப்பு கடன் உட்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்*திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைக்கப்படும்*வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முத்தான திட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...