×

தமிழக அரசு விலையை குறைத்த பிறகு ஆவின் பால் விற்பனை தினசரி 2 லட்சம் லிட்டர் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக அரசு ஆவின் பால் விலையை குறைத்தபிறகு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 36 லட்சம் லிட்டர் பால் தினசரி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, சில  தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்திய நிலையில்,  விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த பேரிடர் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள் எவ்வித பாதிப்புகளுக்கும் உள்ளாகத வகையில் அவர்களிடம் இருந்து மொத்த பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. எனவே, நாளொன்றுக்கு  சுமார் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்து, சுமார் 40 லட்சம் வரை நாளொன்றுக்கு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில்  தினசரி பால் விற்பனை சுமார் 24 லட்சம் லிட்டர் வரை இருந்தது.  தற்போது, தமிழக அரசின் விலை குறைப்புக்கு பிறகு சுமார் 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை உயர்ந்துள்ளது.  மேலும் புதிய  சாதனையாக சென்னையில் கடந்த 23ம் தேதி அன்று 15.04 லட்சம் லிட்டர் மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த 22ம் தேதி 12.59 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக  சுமோட்டா மற்றும்  டான்சோ  நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தினம்தோறும் 700க்கும்  மேற்பட்ட ஆர்டர்கள் நுகர்வோர்களிடம் பெறப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், உலக பால் தினமான நேற்று ஆவின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம், மொத்த பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பால் அட்டை நுகர்வோர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் நந்தகோபால் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்….

The post தமிழக அரசு விலையை குறைத்த பிறகு ஆவின் பால் விற்பனை தினசரி 2 லட்சம் லிட்டர் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...