×

தமிழகத்தில் 200க்கும் கீழ் குறைந்த கொரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 196 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 2,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 554 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,10,228 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, மயிலாடுதுரை, திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 62 பேர், கோவை 25 பேர், செங்கல்பட்டு 20 பேருக்கும் தொற்று உறுதியானது. அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிபேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. …

The post தமிழகத்தில் 200க்கும் கீழ் குறைந்த கொரோனா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Department of People's Welfare ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...