- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- வானிலை
- சென்னை வானிலை நிலையம்
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தின் மேல்நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்தது. அதனையொட்டி கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த கனமழையானது அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து பெய்யும் என தகவல் தெரிவித்தது. நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என தெரிவித்தது. நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நெல்லை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டத்தில் மிக கனமழையும், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஆக.6ம் தேதி கனமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸில் இருந்து 31 டிகிரி செல்ஸியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரியிலிருந்து 27 டிகிரி செல்ஸியஸ் வரையும் இருக்கக்கூடும். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையின் அளவு: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ., தருமபுரி, பாலக்கோடு, மாரந்தஹள்ளி 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரி, மன்னார்வளைகுடா, இலங்கை பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்தகாற்று, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழக கடலோர பகுதி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் 5ம் தேதிவரை மீன்பிடிக்க இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது. …
The post தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.