×

தனியார் ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை

ஆவடி: திருமுல்லைவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் கம்மல் மற்றும் வெள்ளித் தட்டு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த அண்ணனூர் ஜோதி நகரில் வசிப்பவர் துளசிராமன் (37). இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி ஐஸ்வர்யா(33) தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது, வீட்டு சாவியை வீட்டுக்கு வெளியே மாட்டி விட்டு சென்றனர். பின்னர் மாலை 5.00 மணிக்கு வீடு வேலை செய்யும், அய்யப்பாக்கத்தை சேர்ந்த மீனாட்சி (40) என்பவர் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த துளசிராமன் விரைந்து வந்து வீட்டின் உள்ளே பூஜை அறையில் பார்த்தார். ஒரு பவுன் தங்க கம்மல் வெள்ளித்தட்டு 1 மற்றும் 2 செல்போன்கள் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர்….

The post தனியார் ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Thirumullaivayam ,
× RELATED ஆவடி நேரு பஜார், மார்க்கெட் பகுதியில்...