×

தங்கம் விலை தொடர்ந்து 8வது நாளாக அதிகரிப்பு : ரூ. 232 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 39,000ஐ தாண்டியது!!

சென்னை : சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து எட்டாவது நாளாக உயர்ந்துள்ளது. 2021ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கம் விலை ஏற்றத்துடனேயே தொடங்கியது. இந்த வாரத்திலும் விலையேற்றம் நீடிப்பதால் நகை வாங்குவோர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்…சென்னையில் இன்று (ஜனவரி 6) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,885 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய்  உயர்ந்துள்ளது.அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 232 ரூபாய் உயர்ந்து 39,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ரூ.75.10க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 75,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வரும் நாட்களில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை வாங்க சிறுக, சிறுக சேர்த்து வைத்தவர்களுக்கு கூடுதல் செலவையும், சுமையையும் ஏற்படுத்தியுள்ளது….

The post தங்கம் விலை தொடர்ந்து 8வது நாளாக அதிகரிப்பு : ரூ. 232 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 39,000ஐ தாண்டியது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும்...