தக்காளியால் தகராறு ஒருவர் கைது; மூவருக்கு வலை

 

பெரியகுளம், ஜூலை 24: பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி சேர்ந்தவர் மகேந்திரன் (47). இவர் நேற்று கள்ளிப்பட்டியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்தத் தெருவில் குடியிருக்கும் மாயி மனைவி லட்சுமி, அவரது தோட்டத்திலிருந்து தக்காளி, வெண்டைக்காய்களை பறித்து விட்டு வீட்டு முன்பு வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த கள்ளிப்பட்டி பெரியார் காலனி சேர்ந்த பீமராஜ் (22) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அங்கிருந்த தக்காளியை எடுத்துள்ளனர். இதை பார்தத் மகேந்திரன், அவர்களிடம் ஏன் தக்காளியை எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு அவரை அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து லோகேந்திரன் புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பீமாராஜை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் அவருடைய நண்பர்களை தேடி வருகின்றனர்.

The post தக்காளியால் தகராறு ஒருவர் கைது; மூவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: