×

டெல்லியை சுட்டெரித்த வெயில்: 35.2 டிகிரி செல்சியசாக பதிவு : இந்த ஆண்டின் அதிகபட்சம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இந்த ஆண்டின் அதிகபட்சமாக 35.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. டெல்லியில் கடந்த சிலமாதங்களாக வாட்டி வதைத்து வந்த பனிமூட்டம் இப்போது மாறி, வெயில் சூழல் நிலவி வருகிறது. அதுவும் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று குறைந்தபட்சமாக 17.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக 35.2 டிகிரி பதிவானது. இந்த வெப்பம் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பமாகும். அடுத்த மூன்று அல்லது 4 நாட்களுக்கு இதே போல் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் தான் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆராய்ச்சி அறிவித்து உள்ளது. இதற்கிடையே மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. …

The post டெல்லியை சுட்டெரித்த வெயில்: 35.2 டிகிரி செல்சியசாக பதிவு : இந்த ஆண்டின் அதிகபட்சம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு