×

டூவீலர் தொடர் திருட்டு இருவர் கைது

திருப்புவனம், செப். 21: தொடர் டூவீலர் திருட்டு தொடர்பாக மதுரையை சேர்ந்த இருவரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். திருப்புவனம், மதுரை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து டூவீலர்கள் திருடுபோயின. இதில் தொடர்புடைய நபர்களை மதுரை மற்றும் திருப்புவனம் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், டூவீலர் திருட்டில் தொடர்புடைய மதுரை கல்லம்பலை சேர்ந்த பாஸ்கரன் (28), பனையூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் மதுரையில் பதுங்கி இருப்பதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்குசென்று இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post டூவீலர் தொடர் திருட்டு இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirupunam ,Thirupuvanam ,Madurai ,Tiruppuvanam ,
× RELATED கம்யூனிஸ்ட் கட்சி கிளை கருத்தரங்கு