×

டிசிடபிள்யூ நிறுவனத்தில் சாகுபுரம் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

ஆறுமுகநேரி, ஆக. 1: ஆறுமுகநேரி அருகே டிசிடபிள்யூ நிறுவனத்தில் சாகுபுரம் அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 2ம் நிலை துணை ஆளுநர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டு சாகுபுரம் அரிமா சங்க புதிய பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார். தலைவராக பெலிக்ஸ் கிளாட்சன், செயலாளராக பொன் சரவணன், ஒயிட்பீல்ட் மற்றும் பொருளாளராக சுரேஷ்குமார் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக பதவியேற்றனர். இவ்விழாவில் ஏழை எளிய மக்களுக்கு 3 தையல் இயந்திரங்கள், ஒரு சைக்கிள் மற்றும் கல்வி, மருத்துவ உதவித்தொகைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல தலைவர் தினேஷ் பெர்னாண்டோ, வட்டார தலைவர்கள் நடராஜன், சுடலைமணி, டிசி டபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ், அதிகாரிகள் பிரகாஷ், முத்துப்பாண்டியன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

The post டிசிடபிள்யூ நிறுவனத்தில் சாகுபுரம் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Sagupuram Arima Sangha ,Executive Officers ,DCW ,Arumuganeri ,Sagupuram Arima Sangh ,2nd Deputy Governor ,Vethichelvan ,
× RELATED அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள்...