×

டாஸ்மாக் கடையை உடைத்தபோது திருட்டை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு சரமாரி அடி: மர்மநபர்களுக்கு வலை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவளம் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் ராஜேஷ் (28), சதீஷ்குமார் (26) ஆகியோர் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டது. உடனே போலீஸ்காரர்கள் அங்கு சென்று பார்த்தபோது, 5க்கும் மேற்பட்டோர் இரும்பு கம்பி மூலம் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து கொண்டிருந்தனர். உடனே அவர்கள், மர்மநபர்களை சுற்றி வளைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், அவர்களது கையில் இருந்த உருட்டுக்கட்டையாலும், கைகளாலும் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது, தாங்கள் கொண்டு வந்த கட்டிங் மெஷின், இரும்பு ராடு மற்றும் 2 பைக்குகளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதில் 2 பேரும் கழுத்து, கை, கால்களில் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள், காவல் நிலையம் சென்று, நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து போலீசார், படுயாகமடைந்த 2 பேரையும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் விட்டு சென்ற கட்டிங் மெஷின், இரும்பு ராடு, 2 பைக்குகளை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post டாஸ்மாக் கடையை உடைத்தபோது திருட்டை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு சரமாரி அடி: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Madhurandakam ,Chengalpattu District ,Maduraandakam ,Keelavalam village ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நிறைவு...