×

சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ 3 மற்றும் 5வது வழித்தடங்கள் வணிக கட்டிடம் வழியாக இணைப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை, ஜூன் 5: மெட்ரோ வழித்தடம் 3 மற்றும் 5ஐ ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக கட்டிங்கள் வழியாக இணைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால்பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3வது வழித்தடமான மாதவரம் – சிப்காட், 5வது வழித்தடமான மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான இரு வழித்தடங்களை ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் 6வது மாடியுடன் இணைக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: ஆலந்தூர் மெட்ரோ நிலையம் போலவே சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையம் கட்டப்பட உள்ளது. மாதவரம் முதல் சோழிங்நகல்லூர் வரையிலான வழித்தடத்தின் தாழ்வாரம் 35 மீட்டர் உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தாழ்வாரத்தின் கீழ் பகுதியில் 3வது வழித்தடமும், மேல் பகுதியில் 5வது வழித்தடமும் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 வெளியேறும் மற்றும் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது, என்றனர்.

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ இடையே நாளை 3ம் கட்ட சோதனை ஓட்டம்
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் தடத்தில் நாளை 3ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு சென்னை மெட்ேரா ரயில் சார்பில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.

இப்பணிகளை வரும் 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீட்டர் நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், நாளை பூந்தமல்லி போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம். பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீட்டருக்கு, 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை இருமார்க்கத்திலும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

The post சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ 3 மற்றும் 5வது வழித்தடங்கள் வணிக கட்டிடம் வழியாக இணைப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro Lines 3 ,Sholinganallur OMR Road ,Chennai ,Metro Administration ,5 ,OMR Road ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு