×

சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடைவதாகவும், சீரான மின்சாரம் வினியோகம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்தூர் கிராமத்தில் சீரான மின்சாரம் வராததால் குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஸ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cholandur ,RS Mangalam ,Cholantur ,Dinakaran ,
× RELATED சாலையின் நடுவே இடையூறாக மின் கம்பம்