×

சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தாம்பரம் கமிஷனரகத்துக்கு அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை மாநகர காவல்துறை 3 ஆக பிரிக்கப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய கமிஷனரகங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டது. தாம்பரம் கமிஷனராக ஏடிஜிபி ரவி, ஆவடி கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான எல்லைகள் வகுக்கப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. ஆனால் புதிய கமிஷனர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், போலீஸ் நிலையங்கள் குறித்த அரசாணைகள் வெளியிடப்படாமல் இருந்தது.தற்போது புதிய கமிஷனரங்களுக்கு அதிகாரிகள் நியமனம் குறித்த அரசாரணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாம்பரம் கமிஷனர் ரவிக்கு கீழ், சட்டம் ஒழுங்கிற்கு ஒரு இணை கமிஷனர், தலைமையிடம் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு ஒரு இணை கமிஷனர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதோடு போக்குவரத்து பிரிவுக்கு 2 துணை கமிஷனர்கள் பதவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.சட்டம் ஒழுங்கு பதவிகளைப் பொறுத்தவரை தாம்பரம், பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி ஆகிய 3 காவல் மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் தாம்பரம் காவல் மாவட்டத்தில் தாம்பரம், சேலையூர், பல்லாவரம் ஆகிய 3 உதவி கமிஷனர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தாம்பரம் உதவி கமிஷனருக்க கீழ் தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களும், சேலையூர் உதவி கமிஷனருக்கு கீழ் சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம் ஆகிய காவல்நிலையங்கள், பல்லாவரம் உதவி கமிஷனருக்கு கீழ், பல்லாவரம், சங்கர் நகர், குன்றத்தூர் ஆகிய காவல்நிலையங்களும் அடங்கும். அதில் மாடம்பாக்கம் மட்டும் புதிய காவல்நிலையமாகும். மற்றவை எல்லாம் ஏற்கனவே காவல்நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில் பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, கேளம்பாக்கம் ஆகிய உதவி கமிஷனர் பதவிகள் உருவாக்கப்பட்டள்ளன. அதில் பள்ளிக்கரணை உதவி கமிஷனருக்க கீழ் பள்ளிக்கரணை, பெரும்பாக்கமும், செம்மஞ்சேரி உதவி கமிஷனருக்கு கீழ் கன்னகிநகர், கானத்தூர் ஆகிய காவல் நிலையங்களும், கேளம்பாக்கம் உதவி கமிஷனருக்கு கீழ் தாழம்பூர், கேளம்பாக்கம், சிறுசேரி ஆகிய காவல்நிலையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் சிறுசேரி காவல்நிலையம் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.கூடுவாஞ்சேரி காவல் மாவட்டத்தைப் பொறுத்தவரை மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய உதவி கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மணிமங்கலம் உதவி கமிஷனருக்கு கீழ் திருமுடிவாக்கம், மணிமங்கலம், சோமங்கலம், படப்பை ஆகிய காவல்நிலையங்களும், கூடுவாஞ்சேரி உதவி கமிஷனருக்கு கீழ் பீர்க்கங்கரணை, கூடுவாஞ்சேரி, ஓட்டேரி காவல் நிலையங்களும், மறைமலைநகர் உதவி கமிஷனருக்கு கீழ் காயரம்பேடு, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய காவல்நிலையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் படப்பை காயரம்பேடு, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய காவல்நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது….

The post சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தாம்பரம் கமிஷனரகத்துக்கு அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : New Tambaram Commission ,Chennai ,Chennai City Police ,Tambaram ,Awadi ,Chennai City ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்,...