×

சென்னை , கடலூர், ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் மிக கனமழை நாளை மதியம் வரை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: தற்போது சென்னை , கடலூர், ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் மிக கனமழை நாளை மதியம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி சென்னை நகர் முழுவதும் பரவலாக கன மழை பெய்யகூடும் எனவும் தெரிவித்துள்ளார். காரைக்கால் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் மழை மெல்ல குறைய தொடங்கும் என தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதையடுத்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக கனமழை யெ்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்டசமாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் திருவாரூர். நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. …

The post சென்னை , கடலூர், ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் மிக கனமழை நாளை மதியம் வரை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai, Cuddalore, Sriharikota ,Tamil Nadu ,Chennai ,Chennai, ,Cuddalore ,Sriharikota ,Cuddalore, ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...