×

சென்னையில் நடைபெறவுள்ள உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் சுய உதவி குழுக்கள் பங்கேற்கலாம்: 17ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு

விருதுநகர், ஏப்.14: சென்னையில் நடைபெறவுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் பதிவு செய்யலாம் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிர்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர்களாகி சுய தொழில் செய்து வருகின்றனர்.தற்பொழுது சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைபடுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் 29 முதல் மே 15 வரை சென்னை, தீவு திடலில் மண்டல அளவிலான சாராஸ் மேளா என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகை பொருட்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படுகிறது.எனவே, இக்கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் பெயர், முகவரி, உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை வருகிற ஏப்ரல் 17 அன்று மாலை 5 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04562-252036, 98654 59842 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் நடைபெறவுள்ள உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் சுய உதவி குழுக்கள் பங்கேற்கலாம்: 17ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Help Groups ,Produce Fair ,Chennai ,Virudhunagar ,
× RELATED மாநிலத்தில் முதன்மை முன்னோடி...