சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை அதிகரிப்பு ஆனைமலையில் பாக்கு உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி  அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் கொண்டுவரும்  பாக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு வளாக களத்தில் உலரவைக்கும் பணி  தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார  பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதில், கோட்டூர்,  சேத்துமடை, காளியாபுரம், சுப்பேகவுண்டன்புதூர், திம்மம்குத்து,  நல்லூத்துக்குளி, செமனாம்பதி உள்ளிட பகுதிகளில் தென்னைக்கு ஊடுபயிராக பாக்கு  சாகுபடி அதிகளவு உள்ளது. இப்பகுதியில் ஆண்டுக்கு சுமார் 10 டன் வரை பாக்கு  உற்பத்தியாகிறது.  இங்கு உற்பத்தியாகும் பாக்குகளை, விவசாயிகள்  பெரும்பாலும் ஆனைமலை ஒழுங்குமுறை  விற்பனை கூடத்துக்கே கொண்டு வருகின்றனர்.   ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பாக்கு வரத்து அதிகமாக  இருக்கும். விவசாயிகள் கொண்டுவரும் பாக்குகளை குறிப்பிட்ட விலை நிர்ணயம்  செய்து வேளாண் அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதில், கடந்த  தென்மேற்கு பருவமழைக்கு பிறகு சுற்றுவட்டார கிராமங்களில் பாக்கு உற்பத்தி  அதிகளவில் இருந்தது. இதையடுத்து, நன்கு விளைச்சலடைந்த பாக்குகளை அறுவடை  செய்து, கடந்த சில வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, விவசாயிகள் கொண்டு வரும் மங்களா, மொகிந்த்நக ரக பாக்குகளின் எண்ணிக்கை அதிகளவில்  உள்ளது. தற்போது அதன் வரத்து அதிகரிப்பால், ஒழுங்குமுறை விற்பனை  கூடத்தில் தேக்கி வைப்பதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடம் இருந்து வாங்கபெற்ற பாக்குகளை, விற்பனை கூட களத்தில்  தொழிலாளர்கள் உலர வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், என  அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை அதிகரிப்பு ஆனைமலையில் பாக்கு உலர வைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: