தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் இறுதி பட்டியல் வெளியிடாததை கண்டித்து திமுக எம்எல்ஏ இன்பசேகரன் தொடர்ந்து 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பென்னாகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குனருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் தேதி 110 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் பரிசீலனை நிலையில், இறுதிப்பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிடாமல் சென்றுவிட்டார்.