×

சிலாம்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே ₹35.21 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி: உத்திரமேரூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உத்திரமேரூர், மே 4: சிலாம்பாக்கம் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே ₹35.21 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உத்திரமேரூர் அடுத்த சிலாம்பாக்கம் கிராமத்திற்கு அருகே செல்லும் செய்யாற்றில் நபார்டு திட்டத்தின் கீழ், ₹35.21 கோடி மதிப்பீட்டில், சிலாம்பாக்கம் முதல் புதுப்பாளையம் வரையில் புதிய தடுப்பணை கட்டும் பணியின் துவக்க விழா, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், நகர செயலாளர் பாரிவள்ளல், உதவி செயற்பொறியாளர் நீள்முடியோன், இளநிலைப் பொறியாளர் மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு, ₹35.21 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது, இந்த தடுப்பணை கட்டப்படுவதால் சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகரல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த புதுப்பாளையம், அரசானைபாலை, வயலாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,623.54 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் விவசாயிகளின் 132 கிணறுகளில் நீர் மட்டம் உயரும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சிலாம்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே ₹35.21 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி: உத்திரமேரூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chilambakkam ,Uttaramerur MLA ,Uttara Merur ,Chilampakkam ,Uttaramerur… ,Chilampakkam river ,Uttara Merur MLA ,
× RELATED மாடியிலிருந்து கீழே விழுந்ததில்...