×

சாலையோரங்களில் கிடைக்கும் ‘பிரஷ்’ காய்கறிகள்

ஊட்டி, ஜூலை 23: நீலகிரி மாவட்டத்தில் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. அதே போல், பல்வேறு வகையான கீரை வகைகளும் விளைவிக்கப்படுகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சைனீஸ் கேபேஜ் உட்பட பல்வேறு வகையான காய்கறிகளை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வழக்கம்.

இதனை சுற்றுலா பயணிகளும் விரும்பி அதிகளவு வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது சீசன் இல்லாத நிலையில் வார விடுமுறை நாட்களில் மட்டுமே அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழி முழுவதிலும் விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் சைனீஷ் வகை காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், சைனீஸ் காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான கீரை வகைகள் தங்களது தோட்டங்களில் இருந்து பறித்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் இந்த காய்கறிகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வார நாட்களை காட்டிலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இதனை வாங்கிச் செல்கின்றனர். இதனால், வார விடுமுறை நாட்களில் சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் மலை காய்கறிகள் மற்றும் சைனீஷ் வகை காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே இந்த காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.

ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் சாலை, கூடலூர் செல்லும் சாலைகளில் இது போன்று ஏராளமான விவசாயிகள் சாலையோரங்களில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

The post சாலையோரங்களில் கிடைக்கும் ‘பிரஷ்’ காய்கறிகள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் நள்ளிரவில் இடியுடன் மழை...