×

சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் உண்ணாவிரதம் கோரிக்கைகளை வலியுறுத்தி

செய்யாறு, ஆக.11: செய்யாறு அடுத்த கேதாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 175 பேர் நிரந்தர தொழிலாளர்களாகவும், 200க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரக்கோரியும் அவ்வப்போது தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலையின் முகப்பில், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். அதில் ஊதிய முரண்பாடு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் உண்ணாவிரதம் கோரிக்கைகளை வலியுறுத்தி appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Kedanpatti ,Thiruvannamalai… ,Dinakaran ,
× RELATED லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து...