×

குன்னூரில் இயக்கப்படும் கூடுதல் மலை ரயில்களில் இடம் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குன்னூர்: குன்னூரில் இயக்கப்படும் கூடுதல் மலை ரயில்களில் பயணிக்க இடம் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மலை ரயில்களில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூர் ஊட்டி இடையிலான மலை ரயில்களில் 250 பேர் மற்றும் பயணம் செய்ய முடியும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பயண சீட்டுகள் கிடைக்காததால் ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் குன்னூர் -ஊட்டி இடையே இயக்கப்படுவதில்லை என்பது சுற்றுலா பயணிகளின் புகாராக உள்ளது. கோடை சீசன் காலங்களில் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச...