×

சசிகலா விவகாரத்தில் அதிமுக எடுத்த முடிவில் மாற்றமில்லை: ஜெயக்குமார் பேட்டி

திருச்சி: சென்னையில் திமுக பிரமுகரை தாக்கியது உட்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று 5வது முறையாக கையெழுத்திட்ட பின் ஜெயக்குமார் அளித்த பேட்டி: ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து விட்டது. இதுகுறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் அனுப்பி விசாரணை செய்யும். இந்த நேரத்தில் நான் இதுகுறித்து எதுவும் கூற முன்வரவில்லை என்றார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கட்சி எடுத்த முடிவு தான். அதில் மாற்றமில்லை. நேற்று, இன்று, நாளை ஒரே முடிவு தான் என்றார்….

The post சசிகலா விவகாரத்தில் அதிமுக எடுத்த முடிவில் மாற்றமில்லை: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sasikala ,Jayakumar ,Trichy ,DMK ,Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…