×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, ஆக.1: ஊட்டியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர பராமரிப்பு துறையில் (எஸ்டிஆர்) பணியாற்றி கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 4 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துவிட்டு, புதிதாக தனியார் நிறுனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி அமர்த்தியுள்ளனர்.

நான்கு பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி ஊட்டியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல்யு சங்கம் மற்றும் டிஎன்டிசியு ஆகியவை சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல்யு சங்க நிர்வாகி பசுபதி தலைமை வகித்தார். டிஎன்டியுசி நிர்வாகிகள் பிரதீஷ், சுரேஷ், விஜயகுமார், பிரகாஷ், ரஜினி, கிரன்குமார், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஜக்கரியா, புவனேஷ்வரி, மஞ்சுளா, வினோத்குமார்,. சுரேஷ்குமார், ரிச்சர்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து...