×

செப்டம்பர் மாதத்திற்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் : காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை : சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகம், நடைபாதை மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். மயிலாப்பூர் பகுதியில் பொருத்தப்பட்ட 45 சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்றும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும், சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறையும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவல் நிலையங்களில் வழக்கு தொடர்பான வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று கூறிய அவர், விரைவில் அனைத்து வாகனங்களும் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மாநில கல்லூரியில் ரூ.21 கோடி...