×

செப்டம்பர் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் திறப்பு : முதல்வர் குமாரசாமி பேட்டி

பெங்களூரு: காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி நடப்பு மாதம் வரை மட்டும் இன்றி செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரும் திறந்து விடப்பட்டுள்ளது  என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, சென்னபட்டணாவில் நிருபர்களிடம் கூறியது:
மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்துள்ளது.  அணைகள், ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.  காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி நடப்பு மாதம் வரை மட்டும் இன்றி செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Water supply, Tamil Nadu , September: Chief Minister Kumarasamy
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்