×

குன்னூர், குரும்பல் ஊராட்சிகளில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 10: திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர், குரும்பல் ஊராட்சிகளில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின் கீழ் 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின்பேரில், கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீது அலி, உதவி இயக்குநர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி குன்னூர், குரும்பல் ஊராட்சிகளில் நடைபெற்றது.

மருத்துவர்கள் சந்திரன், ராஜசேகர், காவியா, கீர்த்தனா, மோகனப்பிரியா, கால்நடை ஆய்வாளர்கள் முருகுபாண்டியன், சாந்தி, முருகேஷ், கால்நடை உதவியாளர்கள் சுபாஷ் சந்திரன், சதீஷ், சத்யா, புவனேஸ்வரி, நாகமணி கொண்ட மருத்துவ குழுவினர் 900 மாடு, ஆடு, கோழி ஆகியவற்றுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கினர். சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தாது உப்பு வழங்கப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் ராமலிங்கம் ஆய்வு செய்தார். இம்முகாம் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post குன்னூர், குரும்பல் ஊராட்சிகளில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Kurumpal ,Thirutharapoondi ,Kurumbal ,Tamilnadu… ,Coonoor, Kurumbal ,panchayats ,
× RELATED குன்னூர் அருகே குப்பையில் உணவு தேடிய கரடி