×

குடும்ப தகராறில் முன்பகை வாலிபரின் விரல் துண்டிப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவை சேர்ந்த தினேஷ் (26), நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் சக்திவேலுடன் அதே பகுதி 9வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வியாசர்பாடி பி.வி.காலனி 29வது தெருவை சேர்ந்த மதியழகன் (38), தினேஷை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, மதியழகன் மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான கத்தியை எடுத்து தினேஷை வெட்ட பாய்ந்தார். இதை தினேஷ் தடுத்தபோது, அவரது சுண்டுவிரல் துண்டாகி கீழே விழுந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரது சுண்டு விரலை மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனையடுத்து தினேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து, மதியழகனை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகேசன் என்பவரையும் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தினேஷிற்கும், மதியழகன் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் தினேஷை மதியழகன் வெட்டியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மதியழகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post குடும்ப தகராறில் முன்பகை வாலிபரின் விரல் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Dinesh ,12th Street, Vyasarpadi Sharma Nagar ,Sakthivel ,
× RELATED தங்கையை காதலித்ததால் பஞ்சாயத்து பேச...