×

குடிநீர் குழாய்களை மாற்று வழியில் பதிக்க கோரி கலெக்டரிடம் மனு

 

ஈரோடு, ஜூலை 18: குடிநீர் குழாய்களை மாற்று வழியில் அமைக்க கோரி பொதுமக்கள் ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை கள்ளகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டா் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஈரோடு-காங்கயம் பிரதான சாலையில் இருந்து கள்ளகவுண்டன்பாளையம் செல்லும் குறுகலான சாலையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 2 அடி விட்டம் கொண்ட குழாய்கள் அமைப்பதற்காக, சாலையோரத்தில் குழாய்கள் இறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இச்சாலையின் இடது புறத்தில் 10 இஞ்ச் விட்டமுள்ள குழாய் ஜேஜேஎம் திட்டத்தில் குழாய்கள் போடப்பட்டுள்ளது. மேலும், வலது புறத்தில் ஊராட்சியின் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இச்சாலை குறுகலான மற்றும் அதிக வளைவுகள் உள்ளதால் இந்த குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் இணைக்கும் திட்டத்தை அருகே உள்ள அகலமான மாற்று பாதையில் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post குடிநீர் குழாய்களை மாற்று வழியில் பதிக்க கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில்...