×

கீழ்பவானி பிரதான கால்வாய் விரைவாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

கொடுமுடி,ஜூன்15: கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைத்தல் பணியை விரைவில் முடிக்க வேண்டுமென கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கம், எல்7,எல்8 பாசன சபை மற்றும் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற இருசக்கர வாகன பேரணி மற்றும் துண்டு பிரசுர விநியோகத்தை கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சபை துணைத்தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார். இந்த பேரணி மேற்கு ராசம்பாளையத்தில் தொடங்கி குப்பம்பாளையம், சாலைபுதூர், த.ஒத்தக்கடை,மூர்த்திபாளையம், சின்னபையன்புதூர் வழியாக க.ஒத்தக்கடையில் முடிவுற்றது.

அதைத்தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்க தலைவர் பெரியசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி,பொன்னையன்,ஆறுமுகம், முத்துசாமி,மணி,பெரியசாமி மற்றும் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், சீரமைப்பு வேலைகள் செய்தால் குடிநீர் ஆதாரங்கள் எதுவும் சிறிதளவும் பாதிக்கப்படாது. கால்வாயில் தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் எதுவும் அமைக்கப்படுவதில்லை.

அனைத்து பாசனதாரர்களுக்கும் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு சீரமைப்பு வேலைகள் செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ராமசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கீழ்பவானி பிரதான கால்வாய் விரைவாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Kodumudi ,Kilibawani Irrigation Farmers Association ,Kilibawani ,
× RELATED வரும் 26ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்