×

கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பர்கூர் பொறியியல் கல்லூரி, ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை மையம் ஆகியவை தற்காலிகமாக கொரோனா சிறப்பு வார்டு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கூடுதலாக கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக கட்டில்கள், மெத்தைகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Government College ,Corona Special Centre ,Krishnagiri ,Krishnagiri Government Art College ,
× RELATED கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு