×

கிணற்றில் மூழ்கி எஸ்ஐ மகன் பரிதாப பலி

ஆவடி: ஆவடி அடுத்த பாணவேடு தோட்டம் வயல்வெளியில் உள்ள கிணற்றில் நேற்று மாலை 4 வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு வாலிபர் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை பார்த்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்கள் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி வாலிபரை தேடி உள்ளனர். இதன் பிறகு, ஒரு மணி நேரம் போராடி வாலிபரின் சடலத்தை மீட்டுள்ளனர். தகவலறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் சென்னை மாநகர போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் பாலாஜி(21) என்பதும், இவர், நண்பர்களுடன் பூந்தமல்லி வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து வயல்வெளி கிணற்றில் படிக்கட்டில் இறங்கி குளித்தார். இவருக்கு நீச்சல் சரியாக தெரியாததால், தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கிணற்றில் மூழ்கி எஸ்ஐ மகன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : SI ,Aavadi ,Panavedu ,
× RELATED கடந்த 15 வருடங்களாக மூடியே கிடக்கும்...