×

காவல் துறையில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

 

ஈரோடு, ஜூலை 28: ஈரோடு மாவட்ட காவல் துறையில் 25 ஆண்டுகளாக எவ்வித புகாரும் இன்றி சிறப்பாக பணியாற்றிய 74 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை எஸ்பி ஜவகர் வழங்கினார்.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீசார், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் எவ்வித புகார் மற்றும் தண்டனையின்றி 25 வருடங்களாக சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் ரூ.2 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்ட காவல் துறையில் நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்ட 74 போலீஸ் அதிகாரிகள், போலீசார், அமைச்சுப்பணியாளர்களுக்கு நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்பி ஜவகர் தலைமை வகித்து 74 பேருக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 7 போலீசார்களுக்கு மருத்துவ நிவாரண தொகையாக தலா ரூ.25 ஆயிரமும், 3 பேருக்கு ஈமச்சடங்கு தொகையாக தலா ரூ.10 ஆயிரத்தையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காவல் துறையில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode District Police Department ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து