×

காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக வலுப்பெறுகிறது.. சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

சென்னை : சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரியில் இருந்து 300கிமீ கிழக்கு – தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 340 கிமீ தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது). அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதாவது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக வலுப்பெறுகிறது.. சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cuddalore ,Viluppuram ,Chengalpattu ,Kanchipuram ,Tiruvallur ,Puducherry ,
× RELATED தமிழகத்தின் கடலூர், விழுப்புரம்,...