×

காரிமங்கலம் சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்

காரிமங்கலம், செப்.18: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 250 மாடுகள், 300 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ₹15 லட்சத்திற்கு மாடுகளும், ₹17 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹1.50 லட்சத்திற்கு விற்பனையானது. புரட்டாசி மாதம் துவங்கியதால் கால்நடை விற்பனை குறைந்து காணப்பட்ட நிலையில் வரும் வாரங்களிலும் இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதிகாலை முதல் பரபரப்புடன் இயங்கும் கால்நடை சந்தை கால்நடை வரத்து குறைந்ததால் வெறிச்சோடி இருந்தது.

The post காரிமங்கலம் சந்தையில் கால்நடை விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Garimangalam ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்க பணி ஆய்வு