×

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர வெள்ளி மாவடி சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெள்ளி மாவடி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஏகாம்பரநாதர் சமேத ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி சூரியபிரபை, சிம்மம், சந்திரபிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில், முக்கிய உற்சவங்களில் ஒன்றான வெள்ளி மாவடி சேவையில் நேற்று முன்தினம் இரவு ஏகாம்பரநாதர், தேர் பவனியில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்….

The post காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர வெள்ளி மாவடி சேவை appeared first on Dinakaran.

Tags : Bankuni Uttra Silver Lavadi Service ,Kanji Ekamparanathar Temple ,Kanchipuram ,Kanchipuram Ekambaranathar Temple Bankuni Uttara festival ,Bankuni Uttara Silver Lastery Service ,Kanji Ekambaranathar Temple ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...