×

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடை பயணம் காரணமாக குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

குமரி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் காரணமாக குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார். இன்று மாலை தொடங்கும் பாத யாத்திரை துவக்க விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால் குமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக ரவுண்டானா பகுதியிலும், 2ம் கட்டமாக காந்தி மண்டபம் பகுதியிலும், 3ம் கட்டமாக காமராஜர் மணிமண்டபம் பக்கத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கடம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்படுவதாக பூம்புகார் நிர்வாகம் அறிவித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இத்தடையானது நிகழ்ச்சி முடியும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

The post காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடை பயணம் காரணமாக குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Kumari ,Chief Minister of ,Tamil Nadu ,G.K. Stalin ,Congress ,Raakulkandi ,Kong ,Former President ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் முதலாளித்துவ...