×

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.15 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்

 

காங்கயம், ஜூலை 25: காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகள் 31 மூட்டைகள் (1532 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.15 லட்சத்துக்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.77-க்கும்,குறைந்த பட்சமாக ரூ.46-க்கும், சராசரியாக ரூ.76- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

The post காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.15 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Kangayam Regulation Hall ,Kangayam ,Karur Road ,
× RELATED காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு...