மதுரை: ஓய்வூதியம் வழங்க கோரி தியாகி மனைவி தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகி நாராணசாமியின் மனைவி தெய்வாணை ஓய்வூதியம் வழங்க கோரி மதுரை கிளையில் மனு அளித்தார். இதனையடுத்து மத்திய உள்துறை செயலாளர் மற்றும் தமிழக பொதுத்துறையின் ஓய்வூதிய செயலாளர் 2 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!