×

கரூர் மாவட்ட பகுதிகளில் கடைகளில் பதுக்கி வைத்து குட்கா விற்ற 5 பேர் மீது வழக்கு

 

கரூர், மே 31: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 5 பேர்கள் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்றுமுன்தினம், வாங்கல், வெங்கமேடு, தாந்தோணிமலை, வெள்ளியணை, குளித்தலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஆயிஷா, சபரிநாதன், கிருஷ்ணமூர்த்தி, மருதாயி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் மாவட்ட பகுதிகளில் கடைகளில் பதுக்கி வைத்து குட்கா விற்ற 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : gutka ,Karur district ,Karur ,Karur district… ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...