கரூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நல சங்க ஆலோசனைக் கூட்டம்

 

கரூர், செப்.20: கரூரில் நடைபெற்ற மாவட்ட காவல்துறை ஓய்வுபெற்றோர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், மாவட்ட காவல்துறை ஓய்வுபெற்றோர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைவர், செயலாளர், பொரூளாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஜெர்மனியில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் பதக்கம் வென்ற மற்றும் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளை வாழ்த்துவது. சென்னையில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தை சிறப்பாக நடத்தி ஆசிய அளவில் சாதனை படைத்த தமிழக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவது. 2003க்கு முன் பழைய நடைமுறையில் இரூந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி, தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

The post கரூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நல சங்க ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: