×

கரூர் அருகே இரு வேறு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை!: அசம்பாவிதங்களை தடுக்க இரு கிராமங்களிலும் போலீசார் குவிப்பு..!!

கரூர்: கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியில் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர். திருக்காம்புலியூரில் இருந்து பிச்சம்பட்டி வழியாக செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்றிரவு கட்டுமான பொருள் ஏற்றிச் சென்ற லாரிக்கு வழி விடாதது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிச்சம்பட்டியை சேர்ந்த பிரபு மற்றும் சிலர் லாரி ஓட்டுனரையும், கட்டுமானப்பணி மேலாளர் தர்மராஜனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணவாசியை சேர்ந்த தர்மராஜ் மற்றும் அவருடன் சென்ற 10 நபர்கள் பிரபுவை அழைத்து சமாதானம் பேசி இருக்கின்றனர். அப்போது மூண்ட மோதலில் பிரபுவை மணவாசியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பிரபு 2001ம் ஆண்டில் வாழப்பாடி ராமமூர்த்தி கட்சியின் கிருஷ்ணராயபுர வேட்பாளர் பொன்னுசாமியை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர். நேற்று நடைபெற்ற தகராறில் பிரபுவால் தாக்கப்பட்ட தர்மராஜ், மறைந்த பொன்னுசாமியின் உறவினர். எனவே கொலைக்கு பழிவாங்கும் வகையில் முன்விரோதம் காரணமாக பிரபு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். இருவேறு சமுதாயத்திற்கு ஏற்பட்ட பிரச்னை என்பதால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பிச்சம்பட்டி, மணவாசி கிராமங்களில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். …

The post கரூர் அருகே இரு வேறு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை!: அசம்பாவிதங்களை தடுக்க இரு கிராமங்களிலும் போலீசார் குவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு;...