×

கருவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்: அரிசி :  2 கப்கருவேப்பிலை: ஒரு கப்தேங்காய் துருவல்: அரை கப்கடலை பருப்பு: ஒரு டேபிள்ஸ்பூன்காய்ந்த கருவேப்பிலை: 4மிளகு: ஒரு டீஸ்பூன்பெருங்காயம்: சிறு துண்டுநெய்: ஒரு டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்: ஒரு டேபிள்ஸ்பூன்கடுகு: அரை டேபிள்ஸ்பூன்முந்திரி பருப்பு: 10உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது  தேவையான அளவுசெய்முறை:அரிசியை வேகவைத்து குழையாமல் பார்த்து வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் கருவேப்பிலை மிளகாய் ஆகியவற்றை சிவக்க வதக்கவும் பின்னர் அதில் மிளகு சேர்த்து சிறிது வறுத்து அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி இறக்கி வைக்கவும். ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் .வாணலியில் நெய் விட்டு கடுகு சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் முந்திரி பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும் பின் சாதத்தை போட்டு லேசாக கிளறவும் கருவேப்பிலை பொடி உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். இப்போது சுவையான கருவேப்பிலை சாதம் பிரசாதம் தயார்….

The post கருவேப்பிலை சாதம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?