×

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை தமிழகத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசி மற்றும் ஆக்சிஜன் சப்ளை அதிகரித்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்று மாநிலம் முழுவதும் வேகமாக பரவுகிறது. இந்நோய்க்கான லிபோசோமல் ஆம்போடெரிசின் பி IV ஊசி போன்ற மருந்து தமிழ்நாட்டில் தட்டுப்பாடு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அணுகுவதற்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் பி IV மருந்தை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை தமிழகத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Edappadi Palaniswami ,PM ,Chennai ,Tamil ,Nadu Legislative Assembly ,Narendra Modi ,Nadu ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...