×

கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இரங்கல்

டெல்லி: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 5 மாணவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் இந்தியாவில் டொராண்டோ தேவையான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறினார். மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டர் ட்ரெய்லரில் மோதி விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை அன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். …

The post கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Canada ,External Affairs Minister ,Jaya Shankar ,Delhi ,Jaya Shankar mourns ,
× RELATED இலங்கை கடற்படையினரால்...