×

கத்திமுனையில் பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு: மர்மநபர்களுக்கு வலை

 

ஆண்டிபட்டி, ஜூலை 19: ஆண்டிபட்டியில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் 25 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த சிங்கராஜ் என்பவரின் மனைவி பஞ்சவர்ணம் (56). இவர் ஆண்டிபட்டி வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் செய்து முடித்துவிட்டு ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே ஒரு ஆட்டோவில் ஏறி பிச்சம்பட்டிக்கு செல்லுமாறு கூறிள்ளார். ஆட்டோவில் ஏற்கனவே 2 நபர்கள் இருந்ததாக தெரிகிறது.

ஆட்டோ டிரைவர் பிச்சம்பட்டிக்கு செல்லாமல் தேனி மெயின் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி பஞ்சவர்ணத்திடம் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த கவரிங் செயின் அனைத்தையும் பறித்துக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணம் புகாரில், ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

The post கத்திமுனையில் பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Andipatti ,
× RELATED ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!